எங்கள் கதாநாயகனுக்கு
இது இரண்டாவது கல்யாணம்
ஏழெட்டு போஸ்டர்கள்
என்வீட்டுக்கு எதிரில்
இரவெல்லாம் கண்விழித்து
ஒட்டிவைத்தேன் சுவரில்
என்வீட்டு தங்கச்சி
விலையாகாமல் இருந்தால்
எனக்கென்ன வந்தது
திரையிலே கொடிகட்டிப்
பறக்கின்ற நாயகன்
இரவிலே கனவிலே
ஏக்கத்தைத் தந்தவள்
இருவரும் இணைகின்ற
மணவிழா நாளில்
ஏழெட்டுப் போஸ்டர்கள்
என்வீட்டுக்கு எதிரில்
இரவெல்லாம் கண்விழித்து
ஒட்டிவைத்தேன் சுவரில்
ஜன்னல் கம்பிகளில்
கன்னத்தைத் தேய்க்கிறாள்
கண்ணீர் அமிலத்தால்
கம்பிகளைக் கரைக்கிறாள்
அண்ணா எனக்கு
எப்போது கல்யாணம்
கண்ணாலே கேட்கிறாள்
நான் என்ன செய்வது ?
ரசிகர் மன்றத்தில்
பொறுப்புக்கள் அதிகம்
இவளுக்கு வரன்தேட
எனக்கேது நேரம்?
nalla irukku sir
ReplyDelete