Tuesday, February 16, 2010

எனக்கேது நேரம்

எங்கள் கதாநாயகனுக்கு
இது இரண்டாவது கல்யாணம்

ஏழெட்டு போஸ்டர்கள்
என்வீட்டுக்கு எதிரில்
இரவெல்லாம் கண்விழித்து
ஒட்டிவைத்தேன் சுவரில்

என்வீட்டு தங்கச்சி
விலையாகாமல் இருந்தால்
எனக்கென்ன வந்தது

திரையிலே கொடிகட்டிப்
பறக்கின்ற நாயகன்
இரவிலே கனவிலே
ஏக்கத்தைத் தந்தவள்
இருவரும் இணைகின்ற
மணவிழா நாளில்

ஏழெட்டுப் போஸ்டர்கள்
என்வீட்டுக்கு எதிரில்
இரவெல்லாம் கண்விழித்து
ஒட்டிவைத்தேன் சுவரில்

ஜன்னல் கம்பிகளில்
கன்னத்தைத் தேய்க்கிறாள்
கண்ணீர் அமிலத்தால்
கம்பிகளைக் கரைக்கிறாள்

அண்ணா எனக்கு
எப்போது கல்யாணம்
கண்ணாலே கேட்கிறாள்
நான் என்ன செய்வது ?

ரசிகர் மன்றத்தில்
பொறுப்புக்கள் அதிகம்
இவளுக்கு வரன்தேட
எனக்கேது நேரம்?

1 comment: